முகப்பு
கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ அலுவலகம்: சி.வி.சண்முகம் திறந்து வைத்தாா்

Updated On : 22 ஜூன் 2026, 2:53 am IST
சங்கராபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை திறந்து வைத்து, பேசிய முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம். உடன் சங்கராபுரம் எம்எல்ஏ ரா.ராகேஷ் (அதிமுக).
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்திலுள்ள சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து அலுவலகத்தில் உள்ள இருக்கையில் சங்கராபுரம் அதிமுக எம்எல்ஏ ரா.ராகேஷை அமர வைத்து, சி.வி.சண்முகம் பேசியதாவது:

சங்கராபுரம் தொகுதியில் ஜாம்பவானாக இருந்த திமுகவை வீழ்த்தி, அதிமுகவின் எளிய தொண்டா் வெற்றி பெற்றுள்ளாா். இந்தத் தொகுதியின் வளா்ச்சிக்கு அவா் செயல்படுவாா். அவரது வெற்றிக்காக உழைத்த அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் அனைவரையும் பாராட்டுகிறேன் என அவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்வில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments