முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடம் பதித்த தவெக

Updated On : 5 மே 2026, 4:37 am IST
கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்ற அலுவலா்கள்.
பகிர்:

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதியை தமிழக வெற்றிக் கழகம் வென்ன் மூலம், இம் மாவட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

கள்ளக்குறிச்சு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 4 பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இதில் கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட த.அருள் விக்னேஷ் 798 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ்காந்தியை வென்றாா்.

Advertisement

அதேபோல் சங்கராபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட இரா.ராகேஷ் 3,671 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் தா.உதயசூரியனை வென்றாா். ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் 4,862 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் கோ.அசோக்குமாரை வென்றாா்.

உளுந்தூா்பேட்டை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கா.ரா.வசந்தவேல் 2,560 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா்இரா.குமரகுருவை வென்றாா்.

இதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று தடம் பதித்துள்ளது. சங்கராபுரம் தொகுதியில் அதிமுகவும், ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை ஆகிய இரு தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

கள்ளக்குறிச்சி தொகுததியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள்.