முகப்பு
புதுச்சேரி

இங்கிலீஷ் பேச கற்றுக் கொடுக்கும் இங்கிலாந்து குழுவினர்

புதுச்சேரி, ஜூலை 17:  புதுவையை அடுத்த வில்லியனூர் லூர்து அன்னை பள்ளி மாணவர்களுக்கு 27 பேர் கொண்ட இங்கிலாந்து குழுவினர் வெள்ளிக்கிழமை ஆங்கிலப் பயிற்சி அளித்தனர்.   இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அலெ

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:11 pm IST
பகிர்:

புதுச்சேரி, ஜூலை 17:  புதுவையை அடுத்த வில்லியனூர் லூர்து அன்னை பள்ளி மாணவர்களுக்கு 27 பேர் கொண்ட இங்கிலாந்து குழுவினர் வெள்ளிக்கிழமை ஆங்கிலப் பயிற்சி அளித்தனர்.

  இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அலெக்ஸ், கில்மேர் பில்லி, வனஜா, ஆடம் உள்ளிட்ட 27 பேர் கொண்ட குழுவினர் வில்லியனூருக்கு வந்தனர். இக்குழுவினர் எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளித்து சரளமாக பேசுவது குறித்து விளக்கினர்.

  இவர்கள் கடந்த 98-ம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை வீராரெட்டிக்குப்பத்தில் உள்ள அமலா மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து, மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்நிலையில் அமலா பள்ளி நிர்வாகி ஜேசுதாஸ்ராஜா ஏற்பாட்டின் பேரில் வில்லியனூர் லூர்து அன்னை பள்ளிக்கு இங்கிலாந்து ஆசிரியர்கள் முதல்முதலாக அழைத்து வரப்பட்டு ஆங்கிலப் பயிற்சி தரப்பட்டது.

Advertisement

Advertisement

  இந் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 1800 பேர் கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்களும் ஆங்கிலப் பயிற்சி பெற்றனர். இவர்கள் 20 நாள்கள் தங்கி பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று ஆங்கிலப் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

  பள்ளிக்கு வந்த வெளிநாட்டினரை லூர்து அன்னை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்திரு ச.அந்தோணி சகாயம் அடிகளார் வரவேற்று இங்கிலாந்து நாட்டின் கல்விமுறை குறித்து அவர்களுடன் விவாதித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments