சிஐடியூ தொழிற்சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்
புதுவையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
புதுவையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
புதுவையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், விண்ணப்பம் அளித்தும் தொழிலாளர்களை நலச்சங்க கட்டுமான வாரியத்தில் உறுப்பினராக்க வேண்டும், தீபாவளி உதவித்தொகை ரூ.3 ஆயிரத்தை வழங்க வேண்டும், கல்வி உதவி, இதர நலப் பயன்களை உடனே வழங்க வேண்டும், மருத்துவம் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சங்கச் செயலாளர் சீனுவாசன் தலைமையில் ராஜீவ் காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை திரண்ட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அங்கிருந்து பேரணியாக காந்தி நகரில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். அப்போது போலீஸார் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் செய்தனர்.