புதுச்சேரி

உலக சுற்றுலா தினம் கொண்டாட முடிவு

DIN

காரைக்காலில் உலக சுற்றுலா தினம் வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுவது குறித்து பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.  பல்வேறு கல்லூரிகளின்  முதல்வர் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டு, பலவிதமான ஆலோசனைகளை வழங்கினர்.
வருகிற 27 மற்றும் 
28-ஆம் தேதி காரைக்காலில் சுற்றுலா தினத்தை விமரிசையாக கொண்டாடுவது எனவும், 27-ஆம் தேதி காரைக்காலில் ஆட்டோ பேரணி நடத்துவது, 28-ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவ ,மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளை  நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் (பொ) ஏ.ராஜசேகரன், மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

‘வைட்டமின் சி’ ஐஸ்வர்யா கண்ணன்...!

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT