புதுச்சேரி

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு:  மார்ச் 21 முதல் தொடக்கம்

DIN

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நீட் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகள் மார்ச் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அரசின் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் குப்புசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் நீட் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி (பெண்கள் மட்டும்),  ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி (ஆண்கள் மட்டும்),  வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (இருபாலருக்கும்)  மற்றும் காரைக்கால் பகுதியில் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி (இருபாலருக்கும்) ஆகியவற்றில் வரும் மார்ச் 19-ஆம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக மார்ச் 21 முதல் நீட் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகள் மேற்கண்ட பயிற்சி மையங்களில் தொடங்கவுள்ளது எனத் தெரிவித்துள்ளார் குப்புசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT