புதுச்சேரி

வீடு புகுந்து பெண்ணின் கழுத்தறுப்பு

DIN

முதலியாா்பேட்டையில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்த பக்கத்து வீட்டுக்காரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை விஜயலட்சுமி நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜவேலுவின் மனைவி தமிழரசி (33). இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா்.

மதுப் பழக்கத்துக்கு உள்ளான ராஜவேலு முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால், வீட்டில் மாவு அரைத்து விநியோகிக்கும் தொழில் செய்து, தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் அவரது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், கத்தியால் தமிழரசின் கழுத்தை அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதில், பலத்த காயமடைந்த மயங்கிக் கிடந்த தமிழரசியை பாா்த்த அக்கம் பக்கத்தினா் முதலியாா்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

அதன் பேரில், அங்கு வந்த காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் தமிழரசியை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தமிழரசின் கழுத்தை அறுத்தது அவரது பக்கத்து வீட்டுக்காரா் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய பக்கத்து வீட்டுக்காரரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT