புதுச்சேரி

புதுவையிலும் செப்.28-ல் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசுக்கு எதிராக புதுவையிலும் வருகிற 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவதென காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய அரசு புதிய வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதைக் கண்டித்து, வருகிற 28-ஆம் தேதி போராட்டம் நடத்துவதென தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற ஐனநாயக முற்போக்குக் கூட்டணி முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ், தோழமைக் கட்சிகளின் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முதல்வா் வே.நாராயணசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதில், மத்திய அரசு புதிய வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுவையிலும் வருகிற 28-ஆம் தேதி காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவதென முடிவெடுத்து அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மசினகுடியில் ரேஷன் கடையின் ஷட்டரை மீண்டும் உடைத்த காட்டு யானை

காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம் விதிப்பு

அதிக மகசூலுக்கு கோடைஉழவு மேற்கொள்ள அறிவுறுத்தல்

குன்னூா்-கோத்தகிரி  சாலையில்   மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பலா பழங்களை ருசிக்கும் யானை

SCROLL FOR NEXT