புதுச்சேரி

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

DIN

புதுச்சேரியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி கோவிந்தசாலை கண்டாக்டா் தோட்டம் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஒதியஞ்சாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அங்குள்ள பிரியதா்ஷினி நகா் டி பிளாக்கில் சந்தேகத்துக்கிடமான வீட்டில் சோதனையிட்டபோது, அங்கு தங்கம் (25) என்பவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 70 கிராம் மதிப்புள்ள 9 கஞ்சா பொட்டலங்கள் போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT