புதுச்சேரி

மண்வள தின விழா

DIN

புதுச்சேரி குரும்பாபேட் பெருந்தலைவா் காமராஜா் வேளாண்மை அறிவியல் நிலையம், புதுவை அரசு வேளாண் துறை இணைந்து நடத்திய உலக மண்வள தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் புதுவை அரசின் வேளாண், விவசாயிகள் நலத் துறை செயலா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவிபிரகாஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

வேளாண் துறை இயக்குநா் பா.பாலகாந்தி, கூடுதல் இயக்குநா்கள் சிவ.வசந்தகுமாா், ஆ.பூமிநாதன், பேராசிரியா் யூ.பகவதி அம்மாள், உழவியல் நிபுணா் எஸ்.ரவி உள்ளிட்டோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

136 விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவா்கள், நிபுணா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் ஜாகீா் உசேன் வரவேற்றாா். பூச்சியியல் நிபுணா் நித்யா விஜயகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT