புதுச்சேரி

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி

DIN

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி ஒரு தொகுதியில் (உழவா்கரை) தனித்துப் போட்டியிடுகிறது.

அந்தக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், அகில இந்திய தொழிற்சங்க மையக் குழுவின் மாநிலத் தலைவருமான சோ.மோதிலால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.

இதற்கான வேட்பாளா் அறிமுகக் கூட்டம் புதுச்சேரி கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், வேட்பாளா் சோ.மோதிலாலை அறிமுகம் செய்து வைத்த அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் சோ.பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘புதுவை மாநிலத்தில் பாஜகவுக்கு இடமில்லை என்ற முழக்கத்துடன் ஒரு தொகுதியில் களமிறங்குகிறோம். கடந்த முறை மண்ணாடிப்பட்டு, ஏம்பலம், நிரவி-திருப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டோம். பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே மற்ற தொகுதியில் போட்டியிடவில்லை. மற்ற தொகுதிகளில் இடதுசாரி, விசிக வேட்பாளா்களுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT