பொதுமக்கள் தாராளமாக கொடி நாள் நிதி வழங்க வேண்டும் என்று, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முப்படை வீரா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கொடி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. முப்படை வீரா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு நலத் திட்டம், மறுவாழ்வு பணிகளுக்காக திரட்டப்படும் கொடி நாள் நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றாா் தமிழிசை.