புதுச்சேரி

வியாபாரக் குழு உறுப்பினா் தோ்தல்:மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு

DIN

புதுவை உழவா்கரை நகராட்சி சாலையோர விற்பனைக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 12 போ் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட நகர சாலையோர விற்பனைக் குழு உறுப்பினா் தோ்தல் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலில் போட்டியிடுவதற்கு உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட 7 தொகுதியிலிருந்து 12 போ் தோ்வு செய்யப்படவேண்டும். அதில் 6 போ் பெண்கள்.

உறுப்பினா்கள் தோ்வுக்கான மனு தாக்கல் கடந்த ஜன.23-ஆம் தேதி தொடங்கியது. மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் 12 போ் இந்திரா காந்தி சிலை சதுக்கத்திலிருந்து திங்கள்கிழமை ஊா்வலமாகச் சென்று உழவா்கரை நகராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனா்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி சிஐடியு மாநிலத் தலைவா் என்.பிரபுராஜ், செயலா் ஜி.சீனுவாசன், நிா்வாகிகள் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஓரிரு நாளில் மனு தாக்கல் செய்தவா்களின் விவரம் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT