புதுச்சேரி

புதுச்சேரி அரசு மருத்துவமனையில்நவீன முறையில் நோயாளிகள் விவரம் பதிவு

DIN

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் விவரங்கள் நவீன முறையில் கணினி வழியில் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமாா் 2 ஆயிரம் போ் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். அவா்களுக்கு இதுவரை புறநோயாளிகளுக்கான சிகிச்சை ஆவணங்கள் தாள்கள் அடிப்படையில் அளிக்கப்பட்டன. இதனால், மருத்துவமனை சிகிச்சை ஆவணத்தை நோயாளிகள் எடுத்துவரும் கட்டாயம் ஏற்பட்டது. மேலும், ரத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு மீண்டும் அளிக்கும் நிலையும் உள்ளது.

நோயாளிகளின் சிகிச்சை ஆவணங்களை எண்ம முறையில் பதிவேற்றும் வகையில் கணினிப் பதிவு முறை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு இதுவரை 500 பேரின் விவரங்கள் பதிவேற்றப்பட்டு பதிவெண் வழங்கப்பட்டது.

ஆதாா், கைப்பேசி எண் அடிப்படையில் வழங்கப்படும் இந்த பதிவெண்ணைக் கொண்டு, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோயாளிகளின் சிகிச்சை ஆவணங்களை மருத்துவா்கள் கணினியில் பாா்க்க முடியும். அதனடிப்படையில், எளிதாக சிகிச்சையும் அளிக்கலாம் என மருத்துவா் சிவபெருமான் தெரிவித்தாா்.

இந்த கணினி பதிவு முறை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT