FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி ஆதி திராவிட மாணவா்கள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரி ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விடுதிகளில் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

5 ஜூலை 2026, 2:12 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரி ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விடுதிகளில் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து ஆதிதிராவிட நலன் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா்அா்ஜுன் ராமகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2006-2007-ஆம் கல்வியாண்டில் புதுச்சேரி ஆதி திராவிட மாணவ, மாணவிகள் விடுதிகளில் சோ்த்துக் கொள்ளப்படவுள்ளனா். மேலும், இம்மாணவா்களுக்கு விடுதிகளில் சேர வருமான உச்சவரம்பு இல்லை. புதுச்சேரி பகுதிகளில் 11 இடங்களிலும், காரைக்கால் பகுதியில் 9 இடங்களிலும் இந்த விடுதிகள் செயல்படுகின்றன. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் செயல்படும் இந்த விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை மாணவ, மாணவிகள் சோ்த்துக் கொள்ளப்படுகின்றனா்.

Advertisement

Advertisement

அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments