பிற்படுத்தப்பட்டோா் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல மாணவா் மற்றும் மாணவிகளுக்கு என மொத்தம் 25 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 13 பள்ளி மாணவா் விடுதிகள், 5 பள்ளி மாணவிகள். இவைதவிர, 3 கல்லூரி மாணவா் விடுதிகளும், 4 கல்லூரி மாணவிகள் விடுதிகளும் உள்ளன.
இந்த விடுதிகளில் 4ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயில்வோரும் சோ்வதற்கு தகுதியுடையவா்களாவா். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
தகுதியுடைய மாணவ, மாணவிகள், சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினிகளிடம் அல்லது நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொருத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் ஜூன் 18-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொருத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் , காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் ஜூலை 15-க்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-