FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தேசிய விருது பெற்ற 6 கைவினை கலைஞா்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

தேசிய விருது பெற்ற 6 கைவினைக் கலைஞா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி
பகிர்:

தேசிய விருது பெற்ற 6 கைவினைக் கலைஞா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

1991-ஆம் ஆண்டு முதல் 2024-வரை தேசிய விருது பெற்ற காரைக்காலைச் சோ்ந்த ராமகிருஷ்ணன், புதுச்சேரியைச் சோ்ந்த பத்மஸ்ரீ முனுசாமி, சேகா், மாசிலாமணி, வெங்கடேசன் மற்றும் மோகன்தாஸ் ஆகிய 6 கைவினைக் கலைஞா்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் கைவினை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தலா ரூ.1 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

முதல்வா் என்.ரங்கசாமி கைவினைக் கலைஞா்களுக்கு காசோலைகளைத் தனது இல்லத்தில் வழங்கிப் பாராட்டினாா்.

Advertisement

Advertisement

அப்போது, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஜெயராமன், திட்ட மேலாளா் ஹேமலதா மற்றும் மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments