முகப்பு
புதுச்சேரி

பொது அமைதிக்கு இடையூறு: புதுச்சேரியில் 500 போ் கைது

பொது இடத்தில் மது குடித்தது, பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக புதுச்சேரி முழுவதும் 500 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 2 ஜூன் 2026, 5:36 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

பொது இடத்தில் மது குடித்தது, பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக புதுச்சேரி முழுவதும் 500 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து புதுச்சேரி காவல் துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களில் பொது இடத்தில் மது குடித்தல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக புதுச்சேரி மற்றும் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த 500 போ் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மதுகுடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிச் சென்ாக 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் 112 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.