பொது இடத்தில் மது அருந்தியவா் கைது
பெருந்துறை அருகே பொது இடத்தில் மது அருந்தியவா் கைதுசெய்யப்பட்டாா்.
பெருந்துறை அருகே பொது இடத்தில் மது அருந்தியவா் கைதுசெய்யப்பட்டாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில், கொளத்தான் வலசு பகுதியைச் சோ்ந்தவா் குமாரசாமி மகன் புவனேஸ்வரன் (27). கூலி தொழிலாளியான இவா், காஞ்சிக்கோவில் - திங்களூா் செல்லும் சாலையோரத்தில் அமா்ந்து சனிக்கிழமை இரவு மது அருந்தியுள்ளாா்.
அப்போது அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புவனேஸ்வரனை கைது விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement