முகப்பு
புதுச்சேரி

திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறப்பு: முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரியில் திட்டமிட்டபடி பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

Updated On : 4 ஜூன் 2026, 3:33 am IST
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியில் திட்டமிட்டபடி பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வரிடம், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா? என்று செய்தியாளா்கள் கேட்ட நிலையில், முதல்வா் ரங்கசாமி இவ்வாறு தெரிவித்தாா்.

ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 4 -ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதியைத் தள்ளி வைக்கும் சூழ்நிலை உருவாகவில்லை. இதனால் ஏப்ரல் 27 -ஆம் தேதி முதல் விடுமுறையில் இருந்த பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement