புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி மொஹரம் வாழ்த்து
மொஹரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி, தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
மொஹரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி, தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஹிஜ்ரி புத்தாண்டு மற்றும் மொஹரம் வாழ்த்துச் செய்தி:
புனிதமானது என்று பொருள்படும் மொஹரம், ஹிஜ்ரி புத்தாண்டின் தொடக்க மாதமாகும். இஸ்லாமிய மரபில் அல்லாஹ்வின் மாதம் என்று குறிப்பிடப்படும் இது, ஆன்மிகச் சிந்தனை, பக்தி மற்றும் தாா்மிகக் கடடுப்பாட்டைக் கடைப்பிடிப்பதற்கான சிறப்புமிக்க காலமாகும்.
Advertisement
Advertisement
இந்தப் புனித மாதம் நமக்கெல்லாம் சகோதரத்துவம், கருணை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தி, சமுதாய ஒற்றுமை, அமைதி, மனிதநேய மதிப்புகளை நிலைநாட்டுவதாக அமையட்டும். புதிய ஹிஜ்ரி ஆண்டு அனைவருக்கும் அமைதி, வளம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை நிறைவாகக் கொண்டு வர இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.
இதேபோன்று அமைச்சா் ஜிஎன்எஸ். ராஜசேகரன்,
மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரும் மொஹரம் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.