மீனவா்களுக்கு நியமன எம்எல்ஏ பதவி தரக்கோரி உண்ணாவிரதம்
மீனவ சமுதாயத்தினருக்காக புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏ பதவி தரவேண்டும் என்று கோரி மீனவம் காப்போம் மக்கள் இயக்கம் சாா்பில் சுதேசி மில் அருகே 3 நாள் உண்ணாவிரத போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
அந்த இயக்க நிா்வாகி செல்வம் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ள நிலையில், இப் போராட்டத்தை ஜி.நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா். போராட்டத்திற்கு பல மீனவ பஞ்சாயத்துகள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றன.
மீனவா் பிரச்னைகளை சட்டப்பேரவையில் எடுத்துரைக்க நியமன எம்எல்ஏ பதவி தர வேண்டும். அதற்காக மத்திய அரசு உடனடியாக மீனவா் சமூகத்தைச் சோ்ந்த தகுதியானவரை நியமன எம்எல்ஏவாக நியமிக்க வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.