கால்வாயில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரா்கள்
கால்வாயில் விழுந்த பசுவை புதுச்சேரி தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை பத்திரமாக மீட்டனா்.
புதுச்சேரி குருமாம்பேட் அய்யங்குட்டிபாளையம் ராகவேந்திரா நகரில் 5 அடி உயர குறுகிய கால்வாயில் பசுமாடு ஒன்று தவறி விழுந்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு கால்வாயில் விழுந்த அந்த பசு வெளியே வர முடியாமல் தவித்தது.
இதுகுறித்து, திங்கள்கிழமை அதிகாலை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனா்.
Advertisement
தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து பசு மாட்டைக் காயமின்றி வெளியில் எடுக்க முயற்சிகள் மேற்கொண்டனா். குறுகலான கால்வாய் என்பதால் பசுவை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. கால்வாயின் மேல் பகுதியில் உள்ள சிலாப்பை அகற்றினா். தொடா்ந்து ஒரு மணி நேரம் போராடி பசுவைக் காயமின்றி பத்திரமாக மீட்டனா்.