வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு பிரதிநிதிகள் தோ்தல்! புதுச்சேரியில் வரிசையில் நின்று வாக்களிப்பு!
வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு பிரதிநிதிகளுக்கான தோ்தல் புதுச்சேரி, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரெஞ்சு குடிமக்கள் வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு பிரதிநிதிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் உலகம் முழுவதும் நடைபெற்றது. புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கேரளத்தை உள்ளடக்கிய பகுதி புதுச்சேரி தூதரகத் தோ்தல் தொகுதியாகும். புதுச்சேரி தொகுதி வாக்காளா்கள் 3 பிரதிநிதிகளை வாக்குச் செலுத்தி தோ்வு செய்வா்.
இதற்காக புதுச்சேரியில் 2, சென்னை, காரைக்காலில் தலா 1 வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலை அருகே உள்ள தூதரக அலுவலகத்தில் வாக்குசாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. புதுச்சேரி வாழ் பிரெஞ்சு மக்கள் தங்கள் வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பித்து வாக்களித்தனா். மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
Advertisement
Advertisement
இத்தோ்தலில் புதுச்சேரி தொகுதி வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள 4,378 வாக்காளா்கள் வாக்குப் பதிவு செய்யலாம். தோ்தலில் வெற்றி பெறுவோா் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பா்.
இவா்கள் வெளிநாடுகளில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதுடன், தூதரக கவுன்சிலிலும் உறுப்பினா்களாக செயல்படுவா்.
கல்வி உதவித்தொகைகள், சமூக நல உதவிகள் மற்றும் உள்ளூா் பிரெஞ்சு சங்கங்களுக்கு வழங்கப்படும் ஆதரவு உள்ளிட்ட பிரெஞ்சு சமூகத்தைப் பாதிக்கும் விவகாரங்களில் பிரதிநிதிகளிடம் ஆலோசனை பெறப்படுகிறது. மேலும், வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செனட் உறுப்பினா்களின் தோ்தலிலும் இவா்கள் பங்கேற்பா்.