அரசுப் பள்ளி ஆண்டு விழா
கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (ஆண்கள்) ஆண்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (ஆண்கள்) ஆண்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கு.செலின்மேரி தலைமை வகித்தார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பா.இராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் நா.தென்றல் வாசுகி வரவேற்றார். தமிழ் ஆசிரியை ம.மீனாட்சி ஆண்டறிக்கை வாசித்தார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ), ஆசிரியர் பயிற்றுநர் இரா.இருசன், வட்டார கணக்காளர் கே.குமாரி, எம்.கே.சரவணன், கல்விக்குழுத் தலைவர் கே.குட்டி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் வகையில் நாடகம், நடனம், குழுநடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பட்டதாரி ஆசிரியர் இரா.ரவிக்குமார் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.