காவல் துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சார்பில், நான்கு முனை சந்திப்பில் புதன்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சார்பில், நான்கு முனை சந்திப்பில் புதன்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
வெயிலின் தாக்கம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறை சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே மேற்கு காவல் நிலையம் சார்பில் புதன்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது (படம்).
காவல் ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் மருதப்பன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பண்டைராஜ், தலைமைக் காவலர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீஸார் பங்கேற்றனர்.
அங்கு வந்த பொது மக்களை வைத்து, தண்ணீர் பந்தலை போலீஸார் திறந்து வைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.