செஞ்சி அருகே பழங்கால பீரங்கி கண்டெடுப்பு
செஞ்சி வட்டம், பென்னகர் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரங்கி கண்டெடுக்கப்பட்டது.
செஞ்சி வட்டம், பென்னகர் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரங்கி கண்டெடுக்கப்பட்டது.
செஞ்சியில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையோரம் 1.5 மீட்டர் நீளமும், 70 செ.மீ. சுற்றளவும் கொண்ட பீரங்கி கண்டெடுக்கப்பட்டது. இந்த இடம் வெள்ளைக்காரன் திட்டு எனவும், 5 தலைமுறைகளாக இந்த பீரங்கி இங்கேயேதான் உள்ளதென்றும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தொல்லியல் அறிஞர் பெ.லெனின், தலைமை ஆசிரியர் நா.முனுசாமி ஆகியோர் கூறியதாவது: வந்தவாசி போரில் ஆங்கிலேயர்களோ அல்லது பிரெஞ்சுக்காரர்களோ இந்த பீரங்கியைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். மேலும், செஞ்சிக்கோட்டைப் போரில், ராஜாதேசிங்குக்கு எதிராக ஆர்க்காட்டு நவாப்பின் படைகளும் இந்தப் பீரங்கியைப் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது.
இந்தப் பீரங்கியைத் தொல்லியல் துறையினர் கைப்பற்றி, ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.