தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டம்
ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டுச்சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டுச்சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒன்றியத் தலைவர் கே.மணிகண்டன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொருளாளர் டி.சாமிநாதன் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலர் எம்.சி.ஆறுமுகம் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலர் ஏ.வி.ஸ்டாலின்மணி, மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலர் வை.பழனி ஆகியோர் பேசினர்.
புதிய ஒன்றியத் தலைவராக ஆர்.மணிகண்டன், செயலராக எம்.சி.ஆறுமுகம், பொருளாளராக டி.சாமிநாதன், துணைத் தலைவர்களாக ஏழுமலை, வேல்முருகன், வேலாயுதம், துணைச் செயலர்களாக மணிகண்டன், உத்தரக்குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத்தில் பருவமழை சரிவர பெய்யாததால் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
சாத்தனூர் அணையின் வலது, இடதுபுறக் கால்வாய்கள், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி செப்பனிட வேண்டும். விவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.