விஷம் தின்றவர் சாவு
குடும்பப் பிரச்னையில் விஷம் தின்றவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
குடும்பப் பிரச்னையில் விஷம் தின்றவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி கீழ்நடுத்தக்கா பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50). இவரது மகன் ஜெயப்பிரகாஷ், லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். ரவி கடன் பெற்று தனது மகனை வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தாராம். ஆனால், ஒரே மாதத்தில் ஜெயப்பிரகாஷ் வெளிநாட்டில் இருந்து திருப்பி வந்து விட்டாராம்.
இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், ரவி மனமுடைந்து கடந்த 17-ஆம் தேதி வீட்டில் இருந்த விஷத் தன்மையுடைய எலி பேஸ்ட் தின்றுவிட்டாராம்.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்த கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.