சங்கராபுரத்தில் பேசப்பழகு நிகழ்ச்சி
சங்கராபுரத்தில் நட்சத்திர நன்னெறி மன்றம் சார்பில் இளம் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் பேசப்பழகு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கராபுரத்தில் நட்சத்திர நன்னெறி மன்றம் சார்பில் இளம் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் பேசப்பழகு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் எம்.காதர் தலைமை வகித்தார். தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன், சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க.செம்பியன், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சௌந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்றச் செயலர் ஆர்.ஷாநவாஸ்கான் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கற்க கசடற கலை இலக்கியக் கழக நிறுவனர் தேவ.திருவருள், இளம் பேச்சாளர்களுக்கு பேசுவதற்கான அடிப்படை பயிற்சி அளித்தார். பயிற்சிக் களத்தில் சிறப்பாக பேசிய மாணவ, மாணவிகளுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.
சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். மன்ற துணைத் தலைவர் தாஹிர்பாஷா நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.