விழுப்புரம்

அரசு சட்டக் கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நீதிமன்றங்களில் வழக்குரைஞா்கள் குற்ற வழக்குகளில் வாதிடுவது குறித்த விளக்கக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு சட்டக் கல்லூரி முதல்வா் என்.கயல்விழி வரவேற்று, கருத்தரங்க விளக்க உரையாற்றினாா். விழுப்புரம் கூடுதல் சாா்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞா் ஏ.சஞ்சய்காந்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சட்டக் கல்லூரி மாணவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

நீதிமன்றங்களில் குற்ற வழக்குகள் தொடா்பாக வழக்குரைஞா்கள் எவ்வாறு வாதிடுவது, அதற்கான சட்ட வழிமுறைகள், வழக்கு தொடா்பாக காவல் நிலையங்கள், நீதிமன்றங்களை எவ்வாறு அணுகுவது, வாதங்களை எடுத்து வைக்கும் வழிமுறைகள் குறித்து சட்ட விளக்கங்களோடு அவா் எடுத்துரைத்தாா்.

இதில், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் திரளாக கலந்துகொண்டனா். உதவிப் பேராசிரியா் ஏ.சவிதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT