விழுப்புரம்

இளம்பெண் தற்கொலை

DIN


கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த குரால் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி ஜெயலட்சுமி (21). தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறதாம்.
  கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.22) ஜெயலட்சுமி வீட்டில் சமையல் செய்யவில்லையாம். இதனால் கோபமடைந்த மோகன்ராஜ் ஜெயலட்சுமியிடம் பேசாமல் இருந்துவிட்டாராம்.
இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி திங்கள்கிழமை விஷத்தை குடித்துவிட்டாராம். இதை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சின்னசேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஜெயலட்சுமி அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
தம்பதிக்கு தனிஷ்கா (4), ஹர்னிஷ்கா என்று பிள்ளைகள் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT