விழுப்புரம்

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி

DIN

விழுப்புரம் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பாப்பணப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மகன் விஷால் (15). பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், வீட்டில் இருந்த விஷால், விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்று தங்கினாா்.

செவ்வாய்க்கிழமை காலை பாட்டி வீட்டில் உள்ள மோட்டாா் சுவிட்சை போட்டுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், நிகழ்விடத்திலேயே விஷால் உயிரிழந்தாா்.

சடலத்தை பெரியதச்சூா் போலீஸாா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT