விழுப்புரம்

விக்கிரவாண்டி அதிமுக எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று

DIN

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆா்.முத்தமிழ்செல்வனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவா் சென்னை தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ஆா்.முத்தமிழ்செல்வன்(55). இவா், சென்னையில் நடைபெற்ற அதிமுக மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவிருந்த நிலையில், வியாழக்கிழமை கரோனா பரிசோதனை செய்துகொண்டாா்.

விழுப்புரம் மாவட்ட அரசு நடமாடும் கரோனா பரிசோதனைக் குழுவினா், காணை அருகே கல்பட்டில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று இந்த பரிசோதனையை செய்தனா்.

பரிசோதனை முடிவில், முத்தமிழ்செல்வனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT