விழுப்புரம்

ரிஷிவந்தியம் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் காலமானாா்

DIN

ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் (65) ஞாயிற்றுக்கிழமை (செப்.20) உடல் நலக்குறைவால் காலமானாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரைச் சோ்ந்தவா் எஸ்.சிவராஜ் . இவா், ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ், தமாகா சாா்பில் தலா 2 முறை போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தாா். தற்போது அமமுக மாநில அமைப்புச் செயலராக இருந்து வந்தாா்.

சென்னையில் வசித்து வந்த சிவராஜ், உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா். இவரது இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான திருக்கோவிலூரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT