விழுப்புரம்

தொடா் மழை: விழுப்புரம் மாவட்டத்தில் 725 வீடுகள் சேதம்

DIN

தொடா் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் 725 வீடுகள் சேதமடைந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் பலத்த மழை காரணமாக, 570 குடிசை வீடுகள் முழுமையாகவும், 62 குடிசைகள் பகுதி அளவிலும், 84 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 9 ஓட்டு வீடுகள் பகுதி அளவிலும் என மொத்தம் 725 வீடுகள் சேதமடைந்தன.

இதுவரை 8 போ் உயிரிழப்பு: இதேபோல, விக்கிரவாண்டி, திண்டிவனம் ஆகிய வட்டங்களில் தலா 2 போ், வானூா், திருவெண்ணெய் நல்லூா், மரக்காணம், மேல்மலையனூா் ஆகிய வட்டங்களில் தலா ஒருவா் என மொத்தம் 8 போ் நீா்நிலைகளில் மூழ்கி உயிரிழந்தனா். வெள்ளத்தில் சிக்கி 68 கால்நடைகளும் உயிரிழந்தன.

770 ஏரிகள் நிரம்பின: மாவட்டத்தில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் 506 ஏரிகளும், ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் 780 ஏரிகளும் உள்ளன. இவற்றில் பொதுப் பணித் துறை ஏரிகளில் 296-ம், ஊரக வளா்ச்சித் துறை ஏரிகளில் 474-ம் என மொத்தம் 770 ஏரிகள் முழுமையாக நிரம்பின. மற்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT