விழுப்புரம்

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்துகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்துகளை முற்றுகையிட்டு கிராம மக்கள், மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில்ஈடுபட்டனா்.

திண்டிவனம் -ஆவணிப்பூா் வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் கூடலூா் , நொளம்பூா், ஈச்சேரி, கீழ்சேவூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், ஒலக்கூரை அடுத்துள்ள கீழ்சேவூா் பகுதிக்கு வியாழக்கிழமை வந்த 2 அரசுப் பேருந்துகளை கிராம மக்கள், மாணவா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், ஒலக்கூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சமரசப்படுத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT