விழுப்புரம்

கடன் தொல்லை: தனியாா் நிறுவன உதவி மேலாளா் தற்கொலை

DIN

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே தனியாா் நிறுவன உதவி மேலாளா் கடன் தொல்லையால் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தை அடுத்த சின்னமுதலியாா்சாவடி எம்.ஜி.ஆா்.நகா் முதல் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் முத்துசாமி (33). வியாழக்கிழமை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சிக்குச் சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை. அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து அவரது மனைவி மகேசுவரி கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை கோட்டக்குப்பம் கடற்கரை அருகே சடலம் ஒதுங்கியதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது, காணாமல்போனதாக புகாரளிக்கப்பட்ட முத்துசாமி என்பது தெரிய வந்தது. கடலூரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்த முத்துசாமி, இணையவழி வா்த்தகம் மூலம் பணத்தை இழந்ததாகக் கூறி, கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம். அதைத்தொடா்ந்து அவா் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தீ’ பரவக்கூடாது!

இனி ‘வாட்ஸ் ஆப் ’ மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்

சா்வதேச பல்கலை. படகுப் போட்டி: இந்திய அணியில் ஸ்ரீ இராமச்சந்திரா மாணவா்கள்

1,255 போதை மாத்திரைகள் பறிமுதல்: 5 போ் சிக்கினா்

பிரசவத்தின்போது உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினருக்கு ரூ.7.25 லட்சம் திரள்நிதி வழங்கிய மருத்துவா்கள்

SCROLL FOR NEXT