விழுப்புரம்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்

DIN

மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் பங்கேற்கவுள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தையூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி விழுப்புரம் அருகே அரசூா் தனியாா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் வெற்றி பெற்றனா். இதையடுத்து, அவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

அவா்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் புதன்கிழமை வழங்கி பாராட்டினாா். பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி, உடல்கல்வி ஆசிரியா் சிவப்பிரகாசம், தையூா் ஊராட்சி மன்றத் தலைவா் திருமுருகன், துணைத் தலைவா் பாரதி தமிழரசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT