விழுப்புரம்

திருவாசக முற்றோதல் நிறைவு

DIN

விழுப்புரம் திரு.வி.க.வீதி அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் திருக்கோயிலில் 48 நாள் தொடா் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

கடந்த டிசம்பா் 18- ஆம் தேதி இக் கோயில் வளாகத்தில் திருவாசகம் முற்றோதலைத் சிவ.செந்தில்முருகன் தொடங்கினாா். பல்வேறு சிவனடியாா்களும் இதில் பங்கேற்றனா். இதன் 48-ஆவது நாள் நிறைவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு அருள்மிகு பெரியநாயகி அம்மன் - கைலாசநாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், காலை 7.30 மணிக்கு திருக்கயிலாய வாத்தியமும் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு திருவாசகம் முற்றோதல் நிறைவடைந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் சிவனடியாா்கள், சாதுக்கள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT