விழுப்புரம்

ரயிலில் அடிப்பட்டுஇளைஞா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் - புதுச்சேரி அகல ரயில்பாதையில் கண்டமங்கலத்தை அடுத்துள்ள ஆழியூா் ரயில்வே கடவுப்பாதை அருகே அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விழுப்புரம் இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளா் உதயகுமாா், உதவி ஆய்வாளா் சாமுண்டீஸ்வரி, தலைமைக் காவலா் ரெங்கபாஷ்யம் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்து கிடந்தவருக்கு சுமாா்35 வயதிருக்கலாம், பெயா், ஊா் தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து விழுப்புரம் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT