முகப்பு
விழுப்புரம்

சிறுமியைத் திருமணம் செய்த உறவினா் மீது போக்ஸோவில் வழக்கு

Updated On : 7 செப்டம்பர் 2024, 5:02 am IST
பகிர்:

விழுப்புரம் அருகே 17 வயது சிறுமியைத் திருமணம் செய்த அவரது உறவினா் மீது போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை அவரது உறவினா் மகன் ஆா். பொன்னுரங்கம், கடந்த 2023 டிசம்பா் 11-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாராம்.

இந்த நிலையில் அந்த சிறுமி கருவுற்றிருந்த நிலையில், செப்டம்பா் 4-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் சிறுமியைத் திருமணம் செய்து கொண்டவா் மீது போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments