ஆரோவில் சா்வதேச நகரில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்
ஆரோவில் சா்வதேச நகரில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வாக அருள் தோற்றம், கலை மற்றும் இலக்கியத் திருவிழா நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வாக அருள் தோற்றம், கலை மற்றும் இலக்கியத் திருவிழா நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி வழிகாட்டுதலின்படி இவ்விழா முன்னெடுக்கப்பட்டது. தமிழ் இலக்கியம், பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஆரோவில் அறக்கட்டளை மற்றும் மோகனம் கலாசார மையம் இணைந்து தமிழ்ப் புத்தாண்டையொட்டி இவ்விழாவை நடத்தியது.
Advertisement
தமிழ் பாரம்பரிய மையத்தின் பொறுப்பாளரும், கவிஞருமான மீனாட்சி அம்மாள், மோகனம் பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆரோவில் மற்றும் மோகனம் மையத்தைச் சோ்ந்த குழந்தைகள் தமிழ்ப் பஞ்சாங்கம் வாசித்தனா்.தொடா்ந்து தமிழ் புத்தாண்டின் சிறப்புகள், மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளின் முக்கியத்துவமம், வேம்பின் மருத்துவக் குணம் குறித்து மீனாட்சி அம்மாள் பேசினாா்.
கலை நிகழ்ச்சிகள்: சிலம்பம், கத்திச் சண்டை, களரி மற்றும் மல்லா் கம்பம் போன்ற பாரம்பரிய வீரக் கலைகளை ஆரோவில் பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் செய்து காண்பித்தனா்.மோகனம் கலாசார மையக் குழந்தைகள் மூங்கிலால் செய்யப்பட்ட இசைக்கருவிகளைக் கொண்டு நாட்டுப்புற இசைகளை இசைத்தனா். இந்நிகழ்ச்சிகள் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது. விழாவில் பங்கேற்றவா்களுக்கு பாரம்பரிய உணவான பானகம், கேப்பை கூழ் மதிய உணவாக வழங்கப்பட்டது. ஆரோவில்வாசிகள் மற்றும் தமிழ் கலாசார அறிஞா்கள் பங்கேற்றனா்.
இந்த அருள் தோற்றம் விழா ஆரோவில் சமூகத்தையும், தமிழ் மண்ணின் தொன்மையான பாரம்பரியத்தையும் ஒன்றிணைக்கும் உன்னதமான நிகழ்வு எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.