ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் மொழியில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளதைப் பற்றி...
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் மொழியில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
விசுவாவசு ஆண்டு முடிந்து பராபவ தமிழ்ப் புத்தாண்டு இன்று தொடங்கியது. இதனையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ் மொழியில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன்.
Advertisement
Advertisement
சிறப்புமிக்க இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும். இது தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணமாகும்.
அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.
சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டு மட்டுமின்றி, ஒடிசாவில் கொண்டாடப்படும் மகா விஷுபபான சங்கராந்தி, பஞ்சாபில் கொண்டாடப்படும் பைசாகி உள்ளிட்டவைகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Prime Minister Narendra Modi has extended his greetings in Tamil to the people of Tamil Nadu celebrating the Tamil New Year.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.