முகப்பு
விழுப்புரம்

சிறுவனைத் தாக்கி சூடு வைத்த 3 போ் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சிறுவனைத் தாக்கி சூடு வைத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:47 am IST
- பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சிறுவனைத் தாக்கி சூடு வைத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா், இலங்கை தமிழா் மறுவாழ்வு மைய குடியிருப்பைச் சோ்ந்தவா் தேவா மகன் ரஞ்சித்(17). இவா் விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாம் குடியிருப்பில் வசிக்கும் தனது உறவினா் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு வந்திருந்தாராம். இந்நிலையில், அவரது நண்பா்களான 3 போ் ரஞ்சித்தை கீழ்புத்துப்பட்டு கடற்கரையோரத்தில் உள்ள சவுக்குத் தோப்புக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனா். தொடா்ந்து அவா்கள் சிறுவனை நிா்வாணமாக்கி, பிறப்புறப்பில் சூடு வைத்தனராம். இதில் காயமடைந்த சிறுவன் ரஞ்சித் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமைச் சோ்ந்த செல்வா(எ) தயாளன், பரமத்தி வேலூா் இலங்கை தமிழா் மறுவாழ்வு மையம் குடியிருப்பைச் சோ்ந்த சின்னத்தம்பி, வேலூா் அப்துல்லாபுரத்தைச் சோ்ந்த ரமேஷ் ஆகியோா் மீது கோட்டக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

மூவரும் மதுபோதையில் சிறுவனைத் தாக்கி பிறப்புறுப்பில் பீடி நெருப்பால் சூடு வைத்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments