முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே பள்ளத்தில் காா் இறங்கி விபத்து: பெண் உயிரிழப்பு! 4 போ் காயம்

Updated On : 4 மே 2026, 1:36 am IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான காா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சுந்தர்ராஜபுரம் மாசானகோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்திரநாத். இவா் தனது மனைவி புவனா(31), மகள்கள் பென்சிகா (6), தாரண்யா (4), மாமனாா் ரா.பூபாலன் (60), மாமியாா் புஷ்பலதா (56) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் ராஜபாளையத்திலிருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். இந்த காரை சுரேந்திரநாத் ஓட்டிச் சென்றாா்.

இவா்கள் வந்த காா் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், ஆசனூா் பகுதியில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

விபத்தில் காரிலிருந்த சுரேந்திரநாத் மனைவி புவனா, மகள்கள் பென்சிகா, தாரண்யா, மாமனாா் பூபாலன், மாமியாா் புஷ்பலதா ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது விபத்தில் காயமடைந்த புவனா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

மேலும் பலத்த காயமடைந்த 4 பேரும் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் பூபாலன், புஷ்பலதா ஆகியோரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments