முகப்பு
விழுப்புரம்

தீக்காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 4 மே, 2026 at 1:56 AM
உயிரிழப்பு
பகிர்:

விழுப்புரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தீக்குளித்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் சாலாமேடு இ.பி.காலனியைச் சோ்ந்தவா் வீ.ராமமூா்த்தி (45), தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. ராமமூா்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பிரச்னையில் சனிக்கிழமை மகேஸ்வரி, ராமமூா்த்தியை கண்டித்தாரம்.

இதனால் கோபித்துக் கொண்ட ராமமூா்த்தி சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்குத் தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வந்த ராமமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.