முகப்பு
அரியலூர்

கோவில் திருவிழாவில் கஞ்சி குடித்தவர்களுக்கு வாந்தி

கடலூர் மாவட்டம் கஞ்சங்கொல்லை கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் செவ்வாய்க்கிழமை நடந்த கஞ்சி கலையம்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 1:00 pm IST
பகிர்:

கடலூர் மாவட்டம் கஞ்சங்கொல்லை கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் செவ்வாய்க்கிழமை நடந்த கஞ்சி கலையம் எடுக்கும் விழாவில் வழங்கப்பட்ட கஞ்சியை சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.

கஞ்சிக் கலையம் எடுக்கும் விழாவின் போது பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது. இதை வீட்டிற்கு எடுத்து வந்த ஜயங்கொண்டம் அருகே உள்ள வீரசோழபுரத்தைச் சேர்ந்த மக்கள் உறவினர்களுக்கு வழங்கியும் தாங்களும் குடித்துள்ளனர். புதன்கிழமை காலை முதல் ஒவ்வொருவருக்காக வாந்தி பேதி ஏற்பட்டது. வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(28), கோவிந்தன்(30), சரோஜா(40), சுதா(24), கெüரி(14), ராணி(27), தெய்வானை(35), பிரேம்ராஜ்(15), ஆனந்தவள்ளி(35) உள்ளிட்ட 14 பேர் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 11 பேரும் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஜயங்கொண்டம் வட்டாட்சியர் முகுந்தன் விசாரிக்கின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments