பரபரப்பான நிறைவுப் பகுதி... கெட்டி மேளம் தொடர் முடிந்தது!
கெட்டி மேளம் தொடர் நிறைவடைந்தது தொடர்பாக...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கெட்டி மேளம் நிறைவடைந்தது.
கடந்த 2025 ஜனவரியில் ஆரம்பிக்க இந்தத் தொடர், திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
லக்ஷ்மி நிவாசா என்ற கன்னட மொழித் தொடரின் மறு உருவாக்கமாக எடுக்கப்பட்டு வந்த இத்தொடர், கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது.
Advertisement
Advertisement
கெட்டி மேளம் தொடரில் ஸ்ரீகுமார், சாயா சிங், ஸ்ரீகுமார் , விராட், செளந்தர்யா ரெட்டி, பிரவீனா, பொன்வண்ணன், நித்யா உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.
சொந்தமாக வீடு கட்டி மகள்களுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க நினைக்கும் பெற்றோரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வந்தத் தொடர், 442 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.
கெட்டி மேளம் தொடரின் நிறைவுப் பகுதி, பரப்பரப்பான கிளைமேக்ஸ் காட்சிகளுடன் 3 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டு முடிவடைந்தது.
நிறைவு நாள் படப்பிடிப்பின்போது, இந்தத் தொடரில் நடித்த நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து குழுப்படங்களை எடுத்துக்கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Ketti Melam, which aired on Zee Tamil, has concluded
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.