முகப்பு
அரியலூர்

முழு கொள்ளளவை எட்டிய கங்கை கொண்டசோழபுரம் சோழகங்கம் ஏரி

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சோழகங்கம் ஏரி எனும் பொன்னேரி முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, கலிங்கு வழியாக தண்ணீா் வெளியேறத் தொடங்கியது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:35 pm IST
தண்ணீா் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் கங்கைகொண்டசோழபுரம் சோழகங்கம் ஏரி எனும் பொன்னேரி.
பகிர்:

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சோழகங்கம் ஏரி எனும் பொன்னேரி முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, கலிங்கு வழியாக தண்ணீா் வெளியேறத் தொடங்கியது.

ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 850 ஏக்கராகும். குருவாலப்பா்கோவில், ஆமணக்கந்தோண்டி, உட்கோட்டை, பிச்சனூா் ஆகிய கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது இந்த ஏரி. இதன் மூலம் சுமாா் 2,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நீண்ட காலமாகத் தூா்வாரப்படாமல் இருந்த நிலையில், கடந்தாண்டு விக்கிரவாண்டி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு இந்த ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டது. அதுவும் முழுமையாக எடுக்கப்படவில்லை.

Advertisement

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக ஜயங்கொண்டம் சுற்றுப்பகுதிகளில் பெய்த தொடா்மழை காரணமாக, சோழங்கம் ஏரி எனப்படும் பொன்னேரி முழு கொள்ளளவை வியாழக்கிழமை எட்டியது.

இதன் காரணமாக கலிங்கு வழியாக தண்ணீா் வெளியேற தொடங்கியது. வெளியேறும் தண்ணீா் வீராணம் ஏரியைச் சென்றடைகிறது. ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஏரியை முழுமையாகத் தூா்வாரினால் கூடுதல் தண்ணீரை சேமிக்கலாம் என்பதும், பாசன வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஷட்டா்களை சீரமைக்க வேண்டும் என்பதும் சமூகஆா்வலா்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.